Website Hit Tracking
Showing posts with label jakie chan. Show all posts
Showing posts with label jakie chan. Show all posts

Friday, May 23, 2008

Jakie chan, ஜாக்கி சானின் கதை







அலெக்சாண்டர் உலகப் படையெடுப்பு துவங்குவதற்கு முன்பு தன் சொத்துக்களை எல்லாம் தன் நண்பர்களுக்கு பிரித்து கொடுத்து கொண்டிருந்தார்.

அலெக்சாண்டரின் நண்பர் கோபமாக கேட்டார் ''எல்லாவற்றையையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டால் உன்னிடம் மீதம் என்ன இருக்கும்?''

அலெக்சாண்டர் கம்பீரமாகச் சொன்னார் ''நம்பிக்கை....!'' என்று.




விமர்சனம்

''அறை எண் 305-இல் கடவுள்''

கதை:கடவுள் இரண்டு இளைஞர்களோடு தங்கி,புத்தி புகட்டி விட்டு மீண்டும் கடவுளாக மாறி காணாமல் போவது.

கதையின் கதை:பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை,''இந்த சென்சார் குறுக்கீடு மட்டும் இல்லாமல் என்னைப் படம் எடுக்க அனுமதித்தால் இரண்டே வருடத்தில் ஆடசியைப் பிடித்துக் காட்டுவேன்'' என்றார்,

அப்படி சொன்னது மாதிரியே ஆட்சியைப் பிடித்து இன்று வரை தமிழ்நாடு நாசமாய் போனது தனி வரலாறு.

நிற்க.

''இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி''' பிறகு வந்த இரண்டாம் படம், இது.சரித்திர கால படம் மட்டுமல்ல கிராபிக்ஸ் கோட்டையும் கட்ட தெரியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமோ என்னவோ, படம் முழுக்க கணிப்பொறியை நம்பி....

சென்னையில் ஆன்களுக்கான தங்கும் விடுதியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களம்.வேலை தேடி அலைவது,வாடகைப் பாக்கி,உணவு விடுதியில் கடன் என்று ஏற்கனவே பார்த்துப் பார்த்து சலித்துப் போன ஆரம்ப காடசிகள்...

வீட்டு மொட்டைமாடியில் பிரகாஷ் ராஜ் வடிவில் பிரகாஷமாக தோன்றுகிறார்,கடவுள்.

புதிய வேகத்தில்,புதிய பாதையில் வேகம் பிடிக்கிறது,படம்.

சிம்பு தேவன் ஒரு முடிவோடுதான் களம் இறங்கியிருக்கிறார்.அத்தனையும் வசனங்களும் சரவெடி!வெடித்து சிதறியிருப்பது அத்தனையும் போலியான நம்பிக்கைகள்.சிரித்த பிறகு இதுக்கு போயா சிரித்தோம் என்று வருத்தப் படத்தேவையில்லை.அத்தனையும் சிந்தனை முத்துக்கள்!

அந்த இரு இளைஞர்களின் கூடவே தங்கி, உங்கள் குறைகளை கண்டுபிடியுங்கள்.அதை சரி செய்யுங்கள்.முன்னேறுங்கள்!என்று தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டி,தூங்கிப் போகிறார்,கடவுள்.

அந்த இருவரும் கடவுளின் சக்தியிருக்கும் பெட்டியைத் திருடி,கண்டபடி ஊர் சுற்றி,நினைத்ததெல்லாம் செய்து விட்டு,மனிதர்களிடம் தோற்றுப் போய்,திரும்பவும் கடவுளிடம் வந்து சேர்கிறார்கள்.

அதுவரை கடவுள் சக்தியை இழந்த கடவுள்
உள்ளூர் பொறுக்கியை தூக்கிப் போட்டு மிதித்து,கடலை விற்று,மூடும் நிலைக்கு வரும் உணவு விடுதியை தன் உழைப்பால் தூக்கி நிறுத்துவது,தன் கழிவறையை தானே சுத்தம் செய்தும் என்று எல்லா கை தட்டல்களையும் பிரகாஷ்ராஜ் ஒருவரே பெற்று விடுகிறார்.


சேதி:கடவுள் ஒரு உதவாக்கரை.நீ முன்னேற நீ தான் முயற்சி செய்ய வேண்டும்!








அம்மா

என்னை தான் அம்மா
அடிப்பால்....
ஏனோ
அவள் முகத்தில்
வலி தெரியும்.....!

கடைசியில்
நிச்சயம் முத்தம்
கிடைக்கும்

ஏனோ
இன்னோரு தரம் அடிக்க மாட்டாளா- என்று
மனசு ஏங்கும்.....

ஒவ்வொரு பிறந்தநாளும்
அம்மாவின்
இனிப்போடு தான்
பிறக்கும்....

கடைசிவரை கேடகவே இல்லை
அம்மாவின் பிறந்த நாளை.....!


-ஆதிசிவம்.





ஆழ்வார்பேட்டை ஆண்டவன்

கமல் அவதாரம்.


நான் நடிகன்தான் ஆனால் என்னால் (முழு நேர நடிகர்கள்)அரசியல்வாதிகளைப் போல நடிக்க முடியாது.நான் நடிக்கும் நடிப்பை மக்களின் வாழ்க்கையிலிருந்து திருடுகிறேன் என்று சொல்லும் கமல் இதுவரை பல்வேறு அமைப்புகள்,நிறுவனங்கள் வழங்கிய விருதுகளின் எண்ணிக்கை 172 உலகில் இதுவரை இருந்தவர்கள்,இப்போது இருப்பவர்கள் யாரும் இவ்வளவு விருதுகள் பரிசுகள் பெற்றதில்லை.

26.4.08 அன்று சென்னையில் ''தசவாதாரம்'' படப் பாடல் வெளியிட்டு விழா நடந்தது.

''எனக்கும் படப்பிடிப்பின்போது 34 இடங்களில் எலும்பு முறிந்து இருக்கிறது'' என்றார், கமல்.

''கமலுக்கும் ஜாக்கி சானும் சில மாத இடைவெளியில், ஒரே தேதியில் பிறந்த அண்ணன்,தம்பிகள்''என்றார்,கலைஞர்.

''வணக்கம் சென்னை'' என்று தமிழில் ஆரம்பித்து கலக்கினார்,ஜாக்கி.

நான் உங்களோடு சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.நீங்கள் ஆகஷன் காடசிகளில் நடித்துக் கொள்ளுங்கள்.நான் காதல் காடசிகளில் நடிக்கிறேன் என்றார்,ஜாக்கி.

நடக்க முடியாமல் வந்த முதல்வர் கலைஞரை ஓடிப்போய் கைத் தாங்கலாக அழைத்து வந்தது,விழா மேடையில் கிடந்த குப்பைகளை பொறுக்கிப் போய் குப்பைத் தொட்டியில் போட்டு ஜாக்கியே விழாவின் நாயகன் என்ற பெயரை தட்டிச் சென்றார்.

இந்திய உணவுகளையும்,தண்ணீரையும் நான் மறுத்தேன் என்பது பொய் என்றும்...

ஹாங்காங் சீன இயக்குநர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.தசவாதாரம் படத்தை நிச்சயம் பாருங்கள்.இன்னும் முன்னைக் காட்டிலும் கடினமாக உழையுங்கள்.ஏனெனில் உலக ரசிகர்களை இந்திய சினிமா தன் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறது,என்று எச்சரித்தார்,ஜாக்கி தன் இணைய தளம் வழியே....

அதற்கு பெயர்தானே கமலஹாசன்!








இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்.
-ரஷிய பழமொழி.



Monday, April 7, 2008

ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3

ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3






''குமுதம்'' வார இதழின் நிறுவனர் எஸ்.ஏ.பி தான் வாங்கும் அத்தனை அகராதிகளிலும் முடியாது எனக்குறிக்கும் இம்பாசிபிள்-"impossible" என்ற ஆங்கில வார்த்தை இடம் பெறும் பக்கத்தை கிழித்துப் போட்டுவிடுவாராம்.
.



நதியில் பிட்டித்த தீ!
....கன்னட வாழ் தமிழர்களின் மனநிலை ஒரு பறவைப்
பார்வை...



பெங்களூரில் 60 விழுக்காடு தமிழர்கள் மென்பொருள் வல்லுநர்களாக
இருக்கிறார்கள்.கன்னட படங்களை விட தமிழ் படங்கள் நன்றாக ஒடுவதால்,பொறாமைத் தீ தான் கன்னட பிரச்னைக்கு காரணம்!

தங்களின் பிள்ளைகளை கன்னடத்தில் பாடங்களை படிக்க ஒப்புக்கொண்டும்,பெங்களூரைப் பற்றி,கருநாடக அரசாங்கத்தைப் பiற்றிய ஆதரவு நிலையில் ,இவ்வளவு ஏன் காவேரி பிரச்னையில் கூட கருநாடாகவுக்கு ஆதரவாக கருநாடக மாநில உணர்வில்தான் கருநாடக வாழ் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற விவரம்

எல்லா கன்னடர்களுக்கும் தெரியும் என்றாலும்...

இன்னொரு பக்கம் தமிழ் நாளிதழ்கள்,தமிழ் சேனல்,தமிழர் பண்டிகைகள் என்று எதையும்,யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் தமிழனின் அடையாளங்களோடு இருப்பது கன்னடர்களின் கண்களை குத்தி,உறுத்துகிறது...!

இது இப்படி இருக்க....

சென்னைத் தீவுத்திடலில் ஏபரல் 6ந்தேதி (2008) ''தெலுங்கு'' திருமலை திருப்பதிக்கு
திருக்கல்யணமாம்.திருப்பதி தேவஸ்தானமே விழா ஏற்பாடுகளை செய்கிறதாம்!மண்டபத்திற்கான கட்சி அரங்குகளை பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி அமைக்கிறாராம்.

திருப்பதியிலேயே செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட லட்டு,பிரசாதங்களை இலவசமாக வழங்குகிறதாம், தேவஸ்தானம்.ஆனால் அதற்கு நுழைவுச்சீட்டு வாங்கி இருக்க வேண்டுமாம்.ஆள் ஒன்றுக்கு சும்மா வெறும் ஆயிரம் மட்டுந்தானாம்!

சிரிக்காதீங்க........

பெங்களூரிலிருந்து ஆதிசிவம்...


ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3


பசித்தவனுக்கு ரொட்டி(உணவு)தான் கடவுள்.ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட இங்கே இருக்கும் அத்தனை மதங்களுக்கும்,கடவுள்களுக்கும் அர்த்தமே இல்லை.
-சுவாமி விவேகானந்தர்.



50 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடிய அந்த கப்பலில் 150-க்கும் மேற்பட்ட புரட்சி வீரர்களை திரட்டிக்கொண்டு பயணம் செய்தது காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவின் விடுதலைப்படை!ஒரு வீரன் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டான்.சுற்றிலும் இருட்டு!ஒரே கூச்சல் குழப்பம்,இருட்டின் சிரிப்பாய் எங்கும் எதிரொலித்தது.ஒரே ஒரு மண்ணெய் விளக்கு மட்டுந்தான்!

''ம்... இதோ காப்பற்றி விட்டேன்'' என்று ஒரு குரல் கேட்டது.அந்த குரல் ''சே குவேரா''வுக்குரியது.கிழக்கின் வெளிச்சமாய்,காஸ்ட்ரோ சொன்னார். ''நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு இது(நீ )தான், சே

அடையாளம்'' என்றார், உணரச்சி ததும்ப..






ஹாலிவுட் பார்வை
bc 10000 கிமு 10000
.




path finder, apocalypto என்ற இரு படங்களின் கலவை,இது! சிறு சிறு கூட்டமாக,தனித் தனி அடையாளங்களோடு,சிறு சிறு கூடாரங்களில் அமைதியாக வாழ்ந்து
வருகிறார்கள்,பனிக்காட்டு மனிதர்கள்.

எப்போதாவது பயங்கர ஆயுதங்களோடு எல்லோரையும் கொன்று விட்டு மீதி இருப்பவர்களை கயிறு கட்டி இழுத்துப் போகிறது ஒரு கூலிப் படை.அப்படிப் பட்ட தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சிறுமி தான்.நாயகி!
நாயகனின் அப்பாவும் அவனை சிறுவயதில் அனாதையாக விட்டு விட்டு அந்த கூலிப்படையின் இரகசியம் தேடிப்போய் தொலைந்து போகிறார்....

நாயகனும்,நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஒரு மிகப் பெரிய யானைக் கூட்டம் வருகிறது.வேட்டையில் சிறந்தவர்களே புதிய தலைவர் என்ற அறிவிப்பு வெளியாகிறது
நாயகனுக்கே தலைமை பொறுப்பு வருகிறது.நான் அந்த யானையை தனியாக கொல்ல வில்லை.சந்தர்பவசத்தால் அதுவாகவே தான் ஈட்டில் செருகி செத்துப் போனது,நான் ஒன்றும் வீரன் இல்லை என்கிறான்,இதுவரை தலைவராக இருந்தவரிடம்

''எனக்கு தெரியும்,தலைமை பொறுப்புக்கு வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.நீ யே தலைவனாக இரு! '' பழைய தலைவர்.

அந்த கொடூரம் மீண்டும் நிகழ்கிறது! மீண்டும்அந்த கூலிப்படை கொன்று குவிக்கிறது.மீதி
இருப்பவர்களை கயிறு கட்டி இழுத்துப் போகிறது.அந்த கூட்டத்தில் நாயகியும் போகிறாள்...

நாயகி நிலா அழகி,திகட்டாத அழகு,பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அத்தனை அழகு!

சிறு சிறு கூட்டங்களாக இருக்கும் எல்லா பனிக்காட்டு வீரர்களும் அதே காட்டுமிராண்டி கும்பலால் பாதிக்கப்பட்டுத்தான்
இருக்கிறார்கள்.அவர்களும் கடும் கோபத்தில்தான் இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறான்.

எல்லா சிறு கூட்டங்களைளயும் ஒன்று சேர்கிறான்,நாயகனே எல்லோருக்கும் தலைவனாக வழி நடத்திச் செல்கிறான்.பாலைவனத்தில் மனித நதியாக நகர்ந்து போகிறார்கள்.காதல் காலத்தில் நாயகி காட்டிய நட்சத்திரமே எல்லோருக்கும் திசைகாட்டி...

ஒரு நதியில் தன் நாயகியும்,தன் இன மக்களும் எங்கோ சிறு சிறு படகுகளில் கூட்டிச் செல்வதைப் பார்க்கிறார்கள்.நாயகன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவான் நம்பிக்கை ஒளி கண்களில் மின்ன
பிரிகிறாள்...நாயகி..

பிடித்துப்போன மக்களை அடித்து,அடிமையாக்கி சூரிய கடவுளுக்கு மிகப்பெரிய கோவில் கட்ட யானைகளோடு மனிதர்களும் மிருகங்களைப் போல நடத்தப்படும்,அந்த இரகசியம் புரிகிறது.

''அவர்களிடம் இருந்தால் தான் அவர்கள் அடிமைகள்,நம்மோடு இருந்தால் அவர்கள் வீரர்கள்'' என்ற வெற்றி முழக்கத்தோடு,அந்த அடிமையாக்கப்பட்ட மக்களுக்கு புரிய வைத்து மக்களோடு மக்களாக கலந்து ,ஆயுதங்களை மண்ணுக்கள் புதைத்து தக்க சமயம் பார்த்து ஒரே நேரத்தில் தாக்குதலை தொடங்குகிறது,அந்த விடுதலைப்படை!....

இறுதில் கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்தின் தலைமைப் பெண்ணை கொலகிறான்,நாயகன்.

தன் இனத்தோடு,நாயகியையும் மீட்கிறான்,நாயகன்!


சேதி:
கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் அந்த அந்த தேசிய அவமானம் இன்றும் கூட தொடர்கிறது

என்பதுதான் அந்த படம் நமக்கு சொல்லும்,சொல்ல வரும் செய்தி!
<









எருமை மாடு,ஆண்,பெண் இம்மூன்று பிரிவை சேர்ந்தவர்களில் அதிகம் உழைப்பது யார் என்று ஆய்வு நடத்தினார்கள்.அதில் அதிகம் உழைப்பது பெண்,அடுத்து எருமைமாடு,கடைசியாக ஆண் என்று ஆய்வு சொன்னது.


-பிருந்தா கரத்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)








ஹைக்கூ பார்வையில்...
ஜாக்கிசானியினின் கதை-3
தீயின் சுறுப்பாய் ...
தலையில் தீப்பிடித்த சுழலும் பம்பரமாய் இயங்குவது தான் சீனர்களின் இயல்பு.
அந்த தீ ஜாக்கிசானையும் பற்றிக் கொண்டது ஆச்சரியமில்லைதான்!

தனது பள்ளி மாணவர்களை திரைப்படத்துறைக்கு அனுப்பும் காலகட்டம் வந்தது.

ஜாக்கி எட்டு வயதில் 1962-ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படம்

big and little wong tiin bar

ஜாக்கியால் ஒரு இடத்தில் சும்மாவே உட்காரவே முடியாது..வேக வேகமாகச் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு,கெட்ட பழக்கம் என்கிறது,மருத்துவம்.ஆனால் ஜாக்கியால் இந்த கெட்ட பழக்கத்தை விட முடியவில்லை.

அப்படிப்பட்ட ஜாக்கி, ஆரம்ப நாடகளில் ''அங்கே போய் படு; மூச்சின்றி கிட'' என்று பெரும்பாலும் செத்த பிணமாக 'நடிக்கும்' வேலைகளையே கொடுத்து வேடிக்கைப் பார்த்தது,திரைத்துறை!பிறகு சண்டை காட்சிகளில் ஈடுபட்டு,உயரமான கட்டிடங்களில் தாவி ஏறுவது,குதிப்பது போன்ற ''டூப்''பாக நடித்தார்.கொஞ்ச கொஞ்சமாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது என்பதிலிருந்து,சண்டைக் காட்சிகளைத் தானே வடிவமைக்கும் நிபுணராக உயர்ந்தார்.
''இதையெல்லாம் பார்த்த ஒரு படத்தயாரிப்பாளர் ஒருவர் நீயே நடிக்கலாமே'' என்று கூற அப்படி நடித்து 1976-þø வெளிவந்த படந்தான்
little tiger from kanton

அதே நேரத்தில் ஹாங்காங் திரைத்துறையில் ஒரு மாபெரும் மாற்றம்,வெற்றிடம் நிகழ்ந்தது.
''ப்ரூஸ் லீ'' யின் மரணம்!ப்ரூஸ் லீ-யை உருவாக்கிய பெருமை இயக்குநர் லோவி என்பவரைத்தான் சேரும்.அவரின் அதிரடிப்பார்வை ஜாக்கியை குறி வைத்தது.ஜாக்கியை ப்ரூஸ் லீ யாக்க விரும்பினார்.

ஆனால் அதற்கு ஜாக்கி ஒத்துக் கொள்ளவில்லை!
நான்,நானாகவே இருக்க விரும்புகிறேன்.அப்படி நடித்து 1978-þல் வெளிவந்த படந்தான்
half a loaf of kung foo


அதிரடிப் பார்வை தொடரும்.....








எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது,அப்போதைய கருநாடக முதலமைச்சர் குண்டுராவ் வீட்டில் சாப்பிட்டு விட்டு,(கவேரி தண்ணீர் பிரச்னை காரணமாக) ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்காமல் கிளம்பி விட்டார், அந்த

புரடசித்தலைவர்


-புரட்சித் தமிழன் ''சத்யராஜ்''.

Blog Archive