Website Hit Tracking

Monday, April 7, 2008

ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3

ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3






''குமுதம்'' வார இதழின் நிறுவனர் எஸ்.ஏ.பி தான் வாங்கும் அத்தனை அகராதிகளிலும் முடியாது எனக்குறிக்கும் இம்பாசிபிள்-"impossible" என்ற ஆங்கில வார்த்தை இடம் பெறும் பக்கத்தை கிழித்துப் போட்டுவிடுவாராம்.
.



நதியில் பிட்டித்த தீ!
....கன்னட வாழ் தமிழர்களின் மனநிலை ஒரு பறவைப்
பார்வை...



பெங்களூரில் 60 விழுக்காடு தமிழர்கள் மென்பொருள் வல்லுநர்களாக
இருக்கிறார்கள்.கன்னட படங்களை விட தமிழ் படங்கள் நன்றாக ஒடுவதால்,பொறாமைத் தீ தான் கன்னட பிரச்னைக்கு காரணம்!

தங்களின் பிள்ளைகளை கன்னடத்தில் பாடங்களை படிக்க ஒப்புக்கொண்டும்,பெங்களூரைப் பற்றி,கருநாடக அரசாங்கத்தைப் பiற்றிய ஆதரவு நிலையில் ,இவ்வளவு ஏன் காவேரி பிரச்னையில் கூட கருநாடாகவுக்கு ஆதரவாக கருநாடக மாநில உணர்வில்தான் கருநாடக வாழ் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற விவரம்

எல்லா கன்னடர்களுக்கும் தெரியும் என்றாலும்...

இன்னொரு பக்கம் தமிழ் நாளிதழ்கள்,தமிழ் சேனல்,தமிழர் பண்டிகைகள் என்று எதையும்,யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் தமிழனின் அடையாளங்களோடு இருப்பது கன்னடர்களின் கண்களை குத்தி,உறுத்துகிறது...!

இது இப்படி இருக்க....

சென்னைத் தீவுத்திடலில் ஏபரல் 6ந்தேதி (2008) ''தெலுங்கு'' திருமலை திருப்பதிக்கு
திருக்கல்யணமாம்.திருப்பதி தேவஸ்தானமே விழா ஏற்பாடுகளை செய்கிறதாம்!மண்டபத்திற்கான கட்சி அரங்குகளை பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி அமைக்கிறாராம்.

திருப்பதியிலேயே செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட லட்டு,பிரசாதங்களை இலவசமாக வழங்குகிறதாம், தேவஸ்தானம்.ஆனால் அதற்கு நுழைவுச்சீட்டு வாங்கி இருக்க வேண்டுமாம்.ஆள் ஒன்றுக்கு சும்மா வெறும் ஆயிரம் மட்டுந்தானாம்!

சிரிக்காதீங்க........

பெங்களூரிலிருந்து ஆதிசிவம்...


ஹைக்கூ பார்வை ஜாக்கி சானின் கதை-3


பசித்தவனுக்கு ரொட்டி(உணவு)தான் கடவுள்.ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட இங்கே இருக்கும் அத்தனை மதங்களுக்கும்,கடவுள்களுக்கும் அர்த்தமே இல்லை.
-சுவாமி விவேகானந்தர்.



50 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடிய அந்த கப்பலில் 150-க்கும் மேற்பட்ட புரட்சி வீரர்களை திரட்டிக்கொண்டு பயணம் செய்தது காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவின் விடுதலைப்படை!ஒரு வீரன் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டான்.சுற்றிலும் இருட்டு!ஒரே கூச்சல் குழப்பம்,இருட்டின் சிரிப்பாய் எங்கும் எதிரொலித்தது.ஒரே ஒரு மண்ணெய் விளக்கு மட்டுந்தான்!

''ம்... இதோ காப்பற்றி விட்டேன்'' என்று ஒரு குரல் கேட்டது.அந்த குரல் ''சே குவேரா''வுக்குரியது.கிழக்கின் வெளிச்சமாய்,காஸ்ட்ரோ சொன்னார். ''நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு இது(நீ )தான், சே

அடையாளம்'' என்றார், உணரச்சி ததும்ப..






ஹாலிவுட் பார்வை
bc 10000 கிமு 10000
.




path finder, apocalypto என்ற இரு படங்களின் கலவை,இது! சிறு சிறு கூட்டமாக,தனித் தனி அடையாளங்களோடு,சிறு சிறு கூடாரங்களில் அமைதியாக வாழ்ந்து
வருகிறார்கள்,பனிக்காட்டு மனிதர்கள்.

எப்போதாவது பயங்கர ஆயுதங்களோடு எல்லோரையும் கொன்று விட்டு மீதி இருப்பவர்களை கயிறு கட்டி இழுத்துப் போகிறது ஒரு கூலிப் படை.அப்படிப் பட்ட தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சிறுமி தான்.நாயகி!
நாயகனின் அப்பாவும் அவனை சிறுவயதில் அனாதையாக விட்டு விட்டு அந்த கூலிப்படையின் இரகசியம் தேடிப்போய் தொலைந்து போகிறார்....

நாயகனும்,நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஒரு மிகப் பெரிய யானைக் கூட்டம் வருகிறது.வேட்டையில் சிறந்தவர்களே புதிய தலைவர் என்ற அறிவிப்பு வெளியாகிறது
நாயகனுக்கே தலைமை பொறுப்பு வருகிறது.நான் அந்த யானையை தனியாக கொல்ல வில்லை.சந்தர்பவசத்தால் அதுவாகவே தான் ஈட்டில் செருகி செத்துப் போனது,நான் ஒன்றும் வீரன் இல்லை என்கிறான்,இதுவரை தலைவராக இருந்தவரிடம்

''எனக்கு தெரியும்,தலைமை பொறுப்புக்கு வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.நீ யே தலைவனாக இரு! '' பழைய தலைவர்.

அந்த கொடூரம் மீண்டும் நிகழ்கிறது! மீண்டும்அந்த கூலிப்படை கொன்று குவிக்கிறது.மீதி
இருப்பவர்களை கயிறு கட்டி இழுத்துப் போகிறது.அந்த கூட்டத்தில் நாயகியும் போகிறாள்...

நாயகி நிலா அழகி,திகட்டாத அழகு,பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அத்தனை அழகு!

சிறு சிறு கூட்டங்களாக இருக்கும் எல்லா பனிக்காட்டு வீரர்களும் அதே காட்டுமிராண்டி கும்பலால் பாதிக்கப்பட்டுத்தான்
இருக்கிறார்கள்.அவர்களும் கடும் கோபத்தில்தான் இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறான்.

எல்லா சிறு கூட்டங்களைளயும் ஒன்று சேர்கிறான்,நாயகனே எல்லோருக்கும் தலைவனாக வழி நடத்திச் செல்கிறான்.பாலைவனத்தில் மனித நதியாக நகர்ந்து போகிறார்கள்.காதல் காலத்தில் நாயகி காட்டிய நட்சத்திரமே எல்லோருக்கும் திசைகாட்டி...

ஒரு நதியில் தன் நாயகியும்,தன் இன மக்களும் எங்கோ சிறு சிறு படகுகளில் கூட்டிச் செல்வதைப் பார்க்கிறார்கள்.நாயகன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவான் நம்பிக்கை ஒளி கண்களில் மின்ன
பிரிகிறாள்...நாயகி..

பிடித்துப்போன மக்களை அடித்து,அடிமையாக்கி சூரிய கடவுளுக்கு மிகப்பெரிய கோவில் கட்ட யானைகளோடு மனிதர்களும் மிருகங்களைப் போல நடத்தப்படும்,அந்த இரகசியம் புரிகிறது.

''அவர்களிடம் இருந்தால் தான் அவர்கள் அடிமைகள்,நம்மோடு இருந்தால் அவர்கள் வீரர்கள்'' என்ற வெற்றி முழக்கத்தோடு,அந்த அடிமையாக்கப்பட்ட மக்களுக்கு புரிய வைத்து மக்களோடு மக்களாக கலந்து ,ஆயுதங்களை மண்ணுக்கள் புதைத்து தக்க சமயம் பார்த்து ஒரே நேரத்தில் தாக்குதலை தொடங்குகிறது,அந்த விடுதலைப்படை!....

இறுதில் கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்தின் தலைமைப் பெண்ணை கொலகிறான்,நாயகன்.

தன் இனத்தோடு,நாயகியையும் மீட்கிறான்,நாயகன்!


சேதி:
கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் அந்த அந்த தேசிய அவமானம் இன்றும் கூட தொடர்கிறது

என்பதுதான் அந்த படம் நமக்கு சொல்லும்,சொல்ல வரும் செய்தி!
<









எருமை மாடு,ஆண்,பெண் இம்மூன்று பிரிவை சேர்ந்தவர்களில் அதிகம் உழைப்பது யார் என்று ஆய்வு நடத்தினார்கள்.அதில் அதிகம் உழைப்பது பெண்,அடுத்து எருமைமாடு,கடைசியாக ஆண் என்று ஆய்வு சொன்னது.


-பிருந்தா கரத்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)








ஹைக்கூ பார்வையில்...
ஜாக்கிசானியினின் கதை-3
தீயின் சுறுப்பாய் ...
தலையில் தீப்பிடித்த சுழலும் பம்பரமாய் இயங்குவது தான் சீனர்களின் இயல்பு.
அந்த தீ ஜாக்கிசானையும் பற்றிக் கொண்டது ஆச்சரியமில்லைதான்!

தனது பள்ளி மாணவர்களை திரைப்படத்துறைக்கு அனுப்பும் காலகட்டம் வந்தது.

ஜாக்கி எட்டு வயதில் 1962-ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படம்

big and little wong tiin bar

ஜாக்கியால் ஒரு இடத்தில் சும்மாவே உட்காரவே முடியாது..வேக வேகமாகச் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு,கெட்ட பழக்கம் என்கிறது,மருத்துவம்.ஆனால் ஜாக்கியால் இந்த கெட்ட பழக்கத்தை விட முடியவில்லை.

அப்படிப்பட்ட ஜாக்கி, ஆரம்ப நாடகளில் ''அங்கே போய் படு; மூச்சின்றி கிட'' என்று பெரும்பாலும் செத்த பிணமாக 'நடிக்கும்' வேலைகளையே கொடுத்து வேடிக்கைப் பார்த்தது,திரைத்துறை!பிறகு சண்டை காட்சிகளில் ஈடுபட்டு,உயரமான கட்டிடங்களில் தாவி ஏறுவது,குதிப்பது போன்ற ''டூப்''பாக நடித்தார்.கொஞ்ச கொஞ்சமாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது என்பதிலிருந்து,சண்டைக் காட்சிகளைத் தானே வடிவமைக்கும் நிபுணராக உயர்ந்தார்.
''இதையெல்லாம் பார்த்த ஒரு படத்தயாரிப்பாளர் ஒருவர் நீயே நடிக்கலாமே'' என்று கூற அப்படி நடித்து 1976-þø வெளிவந்த படந்தான்
little tiger from kanton

அதே நேரத்தில் ஹாங்காங் திரைத்துறையில் ஒரு மாபெரும் மாற்றம்,வெற்றிடம் நிகழ்ந்தது.
''ப்ரூஸ் லீ'' யின் மரணம்!ப்ரூஸ் லீ-யை உருவாக்கிய பெருமை இயக்குநர் லோவி என்பவரைத்தான் சேரும்.அவரின் அதிரடிப்பார்வை ஜாக்கியை குறி வைத்தது.ஜாக்கியை ப்ரூஸ் லீ யாக்க விரும்பினார்.

ஆனால் அதற்கு ஜாக்கி ஒத்துக் கொள்ளவில்லை!
நான்,நானாகவே இருக்க விரும்புகிறேன்.அப்படி நடித்து 1978-þல் வெளிவந்த படந்தான்
half a loaf of kung foo


அதிரடிப் பார்வை தொடரும்.....








எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது,அப்போதைய கருநாடக முதலமைச்சர் குண்டுராவ் வீட்டில் சாப்பிட்டு விட்டு,(கவேரி தண்ணீர் பிரச்னை காரணமாக) ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்காமல் கிளம்பி விட்டார், அந்த

புரடசித்தலைவர்


-புரட்சித் தமிழன் ''சத்யராஜ்''.

No comments:

Blog Archive