Website Hit Tracking

Sunday, October 14, 2007

"ஐஸ் தீ'" கவிதை







தகுதி பார்த்து வரும் காதல், தரமான காதல் அல்ல!
எந்த செயலை செய்ய நேரிட்டாலும் அதை சாதனை என்று எண்ணிச் செய்!



sms

வாடிக்கையாளர்: என்னப்பா "டீ" யில மண்வாசம் வீசுது?...

டீக்கடைக்காரர்:இப்ப பறிச்ச தேயிலையில போட்ட டீ சார்,அதான் வாசனை கொஞ்சம் தூக்கலா இருக்கு.....!





இன்னொரு மகிழ்ச்சியான செய்தி!


தமிழ் வலைத் தளங்களில் முதன்மையாக இருக்கிற தமிழ்மணம் >>> www.thamizmanam.com<<< இணையத்தளமும்,இந்த வலைத்தளத்தை, அங்கீகாரம் வழங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.இது நமக்கு இன்னொரு மகிழச்சியான செய்தி!
வலைத்தள அலங்கார வேலைகளில் மட்டுமே கவனமாக இருந்த நான், எழுத்துப் பிழைகளில் கவனமாக இல்லை என்பதை "தல"-"பாரதிகிருஷ்ணகுமார்" போன்ற நல்ல மனிதர்கள் பார்வையிட்டுச் சுட்டிக்காட்டிப்போயிருக்கிறார்கள்.

இந்த வலைத்தளத்தை பார்வையிட்டு பாராட்டியவர்களுக்கும்,வெளிப்படையாக குறைகளைச் சுட்டிக்காட்டிப்போனவர்களுக்கும்,எதுவுமே சொல்லாமல் மவுனமாக வந்து போனவர்களுக்கும்
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.




"நன்றி!"





www.beecare.com<<< www.beecare.com <<<
குளவிகளையையோ,பூச்சிகளையையோ நாம் கொல்லும்போது மட்டும் ஒரு வித ரசாயனத்தை வெளியிட்டு செத்துப்போகும் பூச்சியினங்கள்.
அதன் இனத்து மற்ற பூச்சிகள் வாசனை மூலம் வெளிப்படுத்துகிற,இந்த செய்தி அறிந்து கொண்டு அடையாளம் கண்டு கூட்டமாக தாக்கத் தொடங்குமாம்,எதிரிகளை!


www.fishinghurts.com>>> www.fishinghurts.com <<<
மீன் பிடிக்கும் போது கொல்லப் படப்போகிறோம் என்ற பயத்தில் மீன்களுக்கு அதன் உடலில் ஒரு வித திரவம் சுரக்குமாம்!

கதறக் கதற வெட்டிக்கொல்லப்படும் ஆடு,மாடு,கோழிகள் மொத்தமாக வந்து என் காதுக்குள் கத்திவிட்டுப் போனதைப் போன்ற அதிர்ச்சிக்கு ஆளானேன்!

எல்லா உயிர்களுக்கும் வாழ உரிமை உண்டு!எல்லோருக்கும் தாய் இந்த பூமி தான் இல்லையா?
என்ன செய்ய ?
மனிதர்களை மிருகங்களின் பட்டியலில் தானே சேர்த்திருக்கிறது,அறிவியல்?!

www.coolhotmail.com>>> www.coolhotmail.com <<<

மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது உங்களின் விருப்பமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மின்னஞ்சலின் வால் பகுதியை நீங்களே தேர்ந்தேடுக்கும் வசதியுடன் புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது,போய் பாருங்கள்!




ஐஸ் "தீ" கவிதை


கிராமங்களில்....
கழுதைகளுக்கு
கல்யாணம் நடக்கின்றன.

நகரங்களில்....
மனிதர்களுக்கு
விவாகரத்து நடக்கிறது!

குயில் பாடுவதை
நிறுத்திக் கொண்டதும்
எனக்குள் எழுந்து
தனிமைத் தீவு!





செய் "தீ"




நடிகர் விஜயகாந்தை யாரும் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லக் கூடாது.அவர் ஒரு திமுக,கலைஞர் அனுதாபி.தன்னை "புரட்சிக்கலைஞர்" என்று அழைப்பதை பெருமையாக நினைப்பவர்,விஜயகாந்த்.
-நடிகர் ராமராஜன்.

தமிழ் பெண்கள் யாரும் நடிக்க வருவதில்லை.தேனி குஞ்சரம்மா,பரவை முனியம்மா இந்த இருவருக்கும் இருக்கிற தைரியம் கூட தமிழ் இளம் பெண்களுக்கு இல்லை!
-நடிகர் விவேக்.

விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்தபோது,எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது!இந்தியா அழகாகவும்,பசுமையாகவும் இருந்து!
-இந்தியப்பெண் சுனிதா வில்லியம்ஸ்.


ஜப்பான் கூட மென்பொருள் துறை வேலைக்கு இந்திய இளைஞர்களையே பெரிதும் விரும்புகிறது!

அமெரிக்கப் பணக்காரர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறார்.

சீனாவைச் சேர்ந்த பெண்,(ஷியாஷின் பெங்)மாவோ என்பவரை காதலித்தார்.மாவோ இன்னொரு பெண்ணுடன் பழகியதைப் பார்த்த,அந்த பெண் எலிவிஷம் அடங்கிய கேப்சூல் மாத்திரையை வாய்க்குள் மறைத்து வைத்திருந்து,காதலனுக்கு முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் தள்ளிக் கொன்றாள்!

வறுமை நிலையில் உள்ள நாடுகளே ஊழலிலும் முதலிடத்தில் இருக்கின்றன.

விவாகரத்து வாங்கி வாழும் பெற்றோர்களின் குழந்தைகள் பிடிவாதம்,முரட்டுக்குணம் உள்ளவர்களாக வளர்ந்து, பெற்றோர்களின் தப்புகளுக்கு பிள்ளைகள் தண்டனை,கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்!










bye!......

No comments:

Blog Archive